Showing posts with label bala periyava. Show all posts
Showing posts with label bala periyava. Show all posts

Tuesday, April 19, 2016

பசு என்றால் நாட்டுப் பசுதான்!






மானிட வர்க்கத்தின் ச்ரேயசுக்காக தெய்வத்தினால் ப்ரத்யேகமாக ச்ருஷ்டிக்கப்பட்ட புனிதமான ப்ராணி பசு. நாட்டுப் பசுவின் ஒவ்வொரு அங்கத்திலும் பகவான் புனிதத்தன்மை அமைத்திருப்பதுடன், சாணம், சிறு நீர் உடலிலிருந்து பரவும் காற்று,குளம்படி தூசு இவைகளின் மூலமாகவும் நம் ஆரோக்யம், மன உயர்வு வ்ருத்தியாகின்றன.பசுக்களை சாஸ்திர ரீதியாக ஆராதித்து வருவதால் நாம் பல புண்யங்களை அடைவதுடன் மனித யாத்திரையில்  சில சலுகைகளும் அடையப் பெறுகிறோம்.அருகம்புல்லை உணவாக ஏற்கும் பசுக்களின் சாணம் மிக சக்தி வாய்ந்தது. இந்த சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் விபூதி நம் ஆரோக்யத்துக்கும் புனிதத்துவத்துக்கும் உதவுவதுடன் மாந்த்ரீகத்துக்கும் பயன்பட்டு வந்தது.இத்தகைய விபூதியை சாதுக்கள் ஸ்பர்ஸத்தின் மூலம் நாம் ஏற்றால் நம் குறைகள் யாவும் நீங்கிவிடும்.பசுஞ்சாண வரட்டிகள் மூலமும் ,சில மரத்தின் சமித்துகள்
மூலமாகவும் மந்த்ர பூர்வமாக வளர்க்கப் படும் அக்னி பூஜை கண்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.நமது ஆகார சத்துக்கள் எந்த விகிதாசாரத்தில் 
இருக்க வேண்டுமோ, அவை பசும்பால் ஒன்றிலேயே பகவான் அமைத்திருக்கிறார் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் தன்னை கோபாலன் என்று சொன்னதிலிருந்தே பசுக்களின் முக்யத்துவத்தை நாம் உணரவேண்டும்.